Posts

Showing posts from 2009

இறை பொருள்

பிறந்தவர் பிறந்தபின் வாழ்ந்தவர், வாழ்ந்தவர் வாழ்வினை உணர்ந்தவர், உணர்ந்தவர் உணர்ந்ததை கற்றவர், கற்றவர் கல்லாமல் இறந்தவர், இறந்தவர் இறப்பினை கடந்தவர், கடந்தவர் பொய்மெய் பொருள்தருவர், யாரறிவர் யவர் அறிவர், இறை பொருள் தான் ஒன்றை.. - புத்தர் ஸ்ரீ

கணவன் மனைவி உலகு

கணவன் கரு தொலி உரை ஒழுகு, மனைவி இல் மாற்றம் உறை அழகு, குழவி குண தொல் நடை பழகு, அந்தனர் தாள் கேளீர் பீடுடை உலகு. - புத்தர் ஸ்ரீ

வான்நோக்கி நின்ற மைந்தன்

வான்நோக்கி நின்ற மைந்தன் தான்நோக்கி கண்ட வாழ்வுக்கும், புவிநோக்கி வந்த உயிரின் செவிநோக்கி சொன்ன சொல்லுக்கும், பெண்ணே மாறுதல் சொல் மனமே ஆறுதல் கொல்.. - புத்தர் ஸ்ரீ

தமிழ் அறியேன் புலவனானேன்

பிறந்த மண் பிரிந்தே வாழ்ந்தேன், சிறந்த மொழி தமிழ்தான் என்றேன், ஒரு மொழியில் பலமொழி கலந்தோட தமிழ் அறியேன் தமிழ் அறியேன் , தமிழ் மறந்தே தமிழ் புலவனானேன்.. - புத்தர் ஸ்ரீ

கடவுள்

நதியிலும் வான்மதியிலும் ஒளியுளும் நெருப்பிலும் கண்டார் கடவுளை அதுவே மனிதனின் முதல்நிலை.. மண்ணிலும் கல்லிலும் உருவம் தரும் சிலையிலும் வைத்தான் கடவுளை செய்தான் ஒருநிலை.. முன்பிறந்தவர் பின்னின்றான் பன்சிறந்தவர் வழிசென்றான் கான்போர்நெஞ்சம் நடைபழகும் மூராம்நிலையில் முழு உலகம்.. கடவுள் என்று ஒன்றுஇல்லை அறிவே கடவுள் வேருஇல்லை நான்காம் நிலையின் பெருமிதம் பகுத்தறிவாளரின் பிடிவாதம்.. தன்னை உணர்ந்த மனிதன் தானும் கடவுள் என்பவன் ஆத்மா என்னும் உயிரே இதுவே ஐந்தாம் நிலையே.. ஆறாம் நிலையை அறியும்முன் உந்தன் நிலையை அறிவாயே ஞானம் வந்தால் அறிவிலே கடவுளை நீயும் உணர்வாயே.. - புத்தர் ஸ்ரீ

இறைவன் ஒருவன்

புவியில் பிறந்தோர் பெருமைக்குரியோர், விழியில் சான்றோர் வழிகாட்டியோர், தெய்வம் தொழா ஒழுக்கம், செய்கிறேன் வீர வணக்கம், இவர்கழுக்கும் மேல் ஒருவன், இவ்வுலகில் கால்படா இறைவன். - புத்தர் ஸ்ரீ

அகம் பிரம்மாஸ்மி

அகம் பிரம்மாஸ்மி த்வம் பர பிரம்மாஸி சிவாத் பர தரம் நாஸ்த்தி த்ரோனமஸ்த்தி ததக பரம்.. - [தொகுப்பு] புத்தர் ஸ்ரீ

முகம்

அவன்முகம் அவனவன் அறிந்தவன் எவனவன் அகமுகம் ஆழ்ந்தவன் தன்முகம் தெரிந்தவன், பிறர்முகம் புரிந்தவன் உலகினை உணர்ந்தவன் துயர்முகம் துடித்தவன் துறவறம் துறந்தவன், அருள்முகம் அடைந்தவன் அருள்பெற அருளினன் நிஜமுகம் நிகைத்தவன் நிஜத்தினில் நல்லவன், பொய்முகம் பெற்றவன் பொருளுக்கு பொய்த்தவன் மெய்முகம் முடிந்ததும் மெய்ப்பொருள் முகமே.. - புத்தர் ஸ்ரீ

யாரென்று தேடினேன்

கறை படா கரங்களும் சிறை படா நெஞ்சமும், குறை கானா தேகமும் மறை கானா பார்வையும், உண்டென்று தேடினேன் யாரென்று வாடினேன்.. பழி கொண்ட சூழலும் பிழை கண்ட சுற்றமும், திரை கொண்ட உள்ளமும் நெறி கண்ட கொள்கையும், வண்டென்று வந்தது தடைபோட்டு நின்றது.. பால் போன்ற பதுமையும் பனி போன்ற தன்மையும், பூ போன்ற மென்மையும் உள்ள ஒரு பெண்ணை, கண்டால் சொல்வீர் நன்றியை வெல்வீர்.. - புத்தர் ஸ்ரீ

நான் செய்த தவறல்ல

கோழியில் அங்கமானேன் திருகப்பட்டேன் அது நான் செய்த தவறல்ல, ஆடில் அங்கமானேன் அருக்கப்பட்டேன் அது நான் செய்த தவறல்ல, மாடில் அங்கமானேன் வெட்டப்பட்டேன் அது நான் செய்த தவறல்ல, மனிதனில் அங்கமானேன் இருக்கப்பட்டேன் அது நான் செய்த தவறல்ல தான் செய்த தவறு.. - புத்தர் ஸ்ரீ

யார் புத்தர் ஸ்ரீ

தமிழ் படித்தேன் தமிழ் படித்தேன் தமிழ்த் தாயின் தலைமகன் நான், சொர்ப்படைதேன் பொருள்ப் படைத்தேன் கவி படைக்கும் கவிஞன் நான், இயல் தொடுத்தேன் இசை கொடுத்தேன் இசை பாடும் கலைஞன் நான், தடம் அறிந்தேன் படம் வரைந்தேன் ஓசையில்லா ஓவியன் நான், ஒழக்கம் கொண்டேன் நேர்மை கண்டேன் கலியுகத்தில் யார் நான்.. - புத்தர் ஸ்ரீ

கன்னி முகம் காணவே

கண்ணிரண்டு இதழ்திறந்து கன்னி முகம் காணவே முன்னிரண்டு சதைகுழுங்க பின்னிரண்டை தேடுதே சிற்றின்ப வாழ்வை நோக்கி பாதி உயிர் போனதே பேரின்ப மூச்சை தேடி மீதி உயிர் வாழ்கவே! - புத்தர் ஸ்ரீ

உமிழ் உதிர்ந்த

உமிழ் உதிர்ந்த பண்டமும், உதிரம் உறைந்த உணவும், வாயில் இருந்தால் சுவையோடு, வயிற்றில் விழுந்தால் சுடுகாடு.. - புத்தர் ஸ்ரீ