பறவைகள் பாஸ்போர்ட் எடுக்காது சிறகுகள் ஓய்வும் எடுக்காது வலசை போதலுக்கு விசா கிடையாது வெளிநாடென்று ஒன்றும் கிடையாது திசைகள் அனைத்தும் நம்முலகம் இசைகள் படிக்கும் நம்பயணம் காற்றும் நீரும் நம்முணவு போகும் இடம்தான் நம்கனவு வாழ்வின் அர்த்தம் புரிந்தவன் மனதின் கவலைகள் மறந்தவன் உலகியல் உணர்ந்த உள்ளழகன் உலகவியல் பேசும் இவன் உலகன் - புத்தர் ஸ்ரீ
படைப்பவன் பலி கேட்பதில்லை அதை கொடுப்பவன் பசி மறப்பதில்லை, மிருகங்கள் அங்கு இறையாகுகின்றன அவை உனக்கு என்ன திரோகம் செய்தன, உயிர்களை கொல்வதை நிறுத்து இதை மற்றவனுக்கும் உணர்த்து, கொலை வெறியை மறந்து நல்லவனாக திருந்து. - புத்தர் ஸ்ரீ
தாய் வழி சோழன் தந்தை வழி பாண்டியன் பிறப்பில் பல்லவன் வளர்ப்பில் சேரன் என் போல் தமிழன் உலகினில் இல்லை தாய் தமிழ் வளர்ப்பான் தமிழ் தாய்யின் பிள்ளை உணவில் சைவம் மனதில் வைணவம் புத்தியில் புத்தம் சித்தியில் சமணம் என் போல் மனிதன் வாழ்ந்திட வேண்டும் கொள்கை இதுவென்று பரப்பிட வேண்டும் யாதும் ஊரே யாவரும் கேளீர் பாரினை சுற்றிட என்னுடன் வாரீர் தமிழனின் பெருமை கோவிலில் தெரியும் மதம் நீயும் மாறினால் எப்படி புரியும் - புத்தர் ஸ்ரீ
Comments