வேற்றிடம் பாரென்றார்
பிள்ளைகள் பலவாயினும் வேற்றுமையில் வேர் ஊறி, தொல்லைகள் தொலைந்திடவே வேற்றிடம் பாரென்றார்! பேரனும் பேத்தியும் தூரமாய் நில் என, வீட்டிற்குள் சேர்க்கவே கூட்டமாய் மறுக்கின்றார்! அடைக்கலம் அடைந்திட இலவச விடுதியே, விடைதரும் வேளையில் நடையின்றி காத்திருக்க! உலகனின் வாசலில் ஒரு மனம் நொந்ததே மறு வழி தெரியாமல் தலை குனிந்து நின்றதே!!