Posts

Showing posts from 2013

மறுத்தாய் எனை பெற்றெடுக்க

மறுத்தாய் எனை பெற்றெடுக்க மருந்தாய் எமன் வந்துநிற்க களைக்கும் கய நெஞ்சம் கருணை வர அஞ்சும் இருந்தேன் சதை வடிவில் இறந்தேன் சில நொடியில் நின்றது என் சுவாசம் கொன்றது தாய் பாசம் உருவம் எனக்கு இல்லை உலகில் இடம் இல்லை உன் தாய்போல் நீ சுவாசி மறுகணம் நீ யோசி உடலில் ஓர் உயிர்த்துடிக்க அடைவேன் அவள் வாழ்செழிக்க விருந்தாய் நான் வந்திருக்க மறு தாய் எனை பெற்றெடுக்க - புத்தர் ஸ்ரீ

நிலா தோழி

நிலா தோழி நிலா தோழி நிலா தோழி நான் பார்த்ததும் சிரிக்கிறாய் ஏன் வெக்கத்தில் தேய்கிறாய் நிலா தோழி நிலா தோழி நிலா தோழி நான் போகுமிடம்  நீயும் வருகிறாய் இந்த உலகிற்கு அமைதியை தருகிறாய் புண்பட்ட வாழ்க்கைக்கு  மருந்தாக அமைகிறாய் என் கண்களுக்கு பெண்ணாக தெரிகிறாய் எந்த ஆண்னாலும் உன்னை தொடமுடியாது என்ன ஆனாலும் என்னால் உனைவிடமுடியாது நிலா தோழி நிலா தோழி நிலா தோழி நான் பார்த்ததும் சிரிக்கிறாய் ஏன் வெக்கத்தில் தேய்கிறாய் நான் போகுமிடம்  நீயும் வருகிறாய் இந்த உலகிற்கு அமைதியை தருகிறாய் எந்த பெண்ணுக்கும் என்னை பிடிக்காது அந்த விண்ணுக்கும் என்னால் வர இயலாது உன்னால் என்னை மணக்க முடியாது என்னால் உன்னை மறக்க முடியாது.. நிலா தோழி நிலா தோழி நிலா தோழி நான் பார்த்ததும் சிரிக்கிறாய் ஏன் வெக்கத்தில் தேய்கிறாய் நிலா தோழி நிலா தோழி நிலா தோழி நான் போகுமிடம்  நீயும் வருகிறாய் இந்த உலகிற்கு அமைதியை தருகிறாய்

விழுந்தேன் கவிஞனாய்

புவி இசை கண்டு.. விழுந்தேன் கவிஞனாய் இசை ருசி கொண்டு.. விழுந்தேன் கவிஞனாய் இசைதாய் பாதம் தொட்டு.. விழுந்தேன் கவிஞனாய் என் தாயின் கருவில்.. பிறந்தேன் மனிதனாய்.. கம்பன் கவி கண்டு.. விழுந்தேன் கவிஞனாய் குறளின் பொருள் கொண்டு.. விழுந்தேன் கவிஞனாய் சங்க தமிழ் உண்டு.. விழுந்தேன் கவிஞனாய் தமிழ் தாயின் மடியில்.. விழுந்தேன் கவிஞனாய்..! எழுந்தேன் கவிதையாய்!! - புத்தர் ஸ்ரீ