Posts

Showing posts from 2020

எதை கொண்டு வந்தோம்? எதை கொண்டு செல்வோம்?

பிண்டமாய் உயிர்த் து எ ழுந்து  மாதமாய் ஐந் து   இ ரண்டு  மீதமாய் வளர்ந்து வந்து  பாகமாய் பன் இரண்டு  கொண்டு வந்த து   எ துவுமில்லை  என்று சொல்ல எவருமில்லை  தேகமும் ஆசையும் நாம்  கொண்டு வந்த உடமையே ! தெண்டமாய் வாழும் வாழ்வை  பருவமாய் தினம் மலர்ந்து  வருடமாய் பல கடந்து  நிமிடமாய் பிரியும் உடலை  கொண்டு செல்ல  எதுவுமில்லை  என்று சொல்ல எவருமில்லை  அனுபவமும் ஞாபகமும் நாம்  கொண்டு செல்லும்  உடமையே ! - புத்தர் ஸ்ரீ 

கொரோனா கவிதை

ஆடு மாடு கோழியோ பாம்பு பன்றி பல்லியோ எதை கொன்று வந்ததோ எந்த பாவி தின்றதோ ஒருவனிடம் தோன்றியே உலகம் எங்கும் பரவியே ஆலயங்கள் மூடியே அறிவியலை நம்பியே அடைத்து வைத்த உயிர்களின் உள் உணர்வை கருதியே தோற்றம் கண்ட கிருமியே அடைந்தோம் நாங்கள் வீட்டிலே மாசு வெப்பம் குறைக்கவே மனிதன் மறந்த வரிகளே மனித இன தோற்றமே மற்ற உயிரை காக்கவே -- புத்தர் ஸ்ரீ