எதை கொண்டு வந்தோம்? எதை கொண்டு செல்வோம்?

பிண்டமாய் உயிர்த்து எழுந்து 
மாதமாய் ஐந்து ரண்டு 
மீதமாய் வளர்ந்து வந்து 
பாகமாய் பன் இரண்டு 

கொண்டு வந்தது துவுமில்லை 
என்று சொல்ல எவருமில்லை 
தேகமும் ஆசையும் நாம் 
கொண்டு வந்த உடமையே !

தெண்டமாய் வாழும் வாழ்வை 
பருவமாய் தினம் மலர்ந்து 
வருடமாய் பல கடந்து 
நிமிடமாய் பிரியும் உடலை 

கொண்டு செல்ல  எதுவுமில்லை 
என்று சொல்ல எவருமில்லை 
அனுபவமும் ஞாபகமும் நாம் 
கொண்டு செல்லும்  உடமையே !

- புத்தர் ஸ்ரீ 

Comments

Popular posts from this blog

இவன் உலகன்

படைப்பவன் பலி கேட்பதில்லை

என் போல் தமிழன்