கொரோனா கவிதை
ஆடு மாடு கோழியோ பாம்பு பன்றி பல்லியோ எதை கொன்று வந்ததோ எந்த பாவி தின்றதோ ஒருவனிடம் தோன்றியே உலகம் எங்கும் பரவியே ஆலயங்கள் மூடியே அறிவியலை நம்பியே அடைத்து வைத்த உயிர்களின் உள் உணர்வை கருதியே தோற்றம் கண்ட கிருமியே அடைந்தோம் நாங்கள் வீட்டிலே மாசு வெப்பம் குறைக்கவே மனிதன் மறந்த வரிகளே மனித இன தோற்றமே மற்ற உயிரை காக்கவே -- புத்தர் ஸ்ரீ