முகம்

அவன்முகம் அவனவன் அறிந்தவன் எவனவன்
அகமுகம் ஆழ்ந்தவன் தன்முகம் தெரிந்தவன்,
பிறர்முகம் புரிந்தவன் உலகினை உணர்ந்தவன்
துயர்முகம் துடித்தவன் துறவறம் துறந்தவன்,
அருள்முகம் அடைந்தவன் அருள்பெற அருளினன்
நிஜமுகம் நிகைத்தவன் நிஜத்தினில் நல்லவன்,
பொய்முகம் பெற்றவன் பொருளுக்கு பொய்த்தவன்
மெய்முகம் முடிந்ததும் மெய்ப்பொருள் முகமே..

- புத்தர் ஸ்ரீ

Comments

Popular posts from this blog

இவன் உலகன்

படைப்பவன் பலி கேட்பதில்லை

என் போல் தமிழன்